சனி, 22 பிப்ரவரி, 2014

சுவிசை துறந்த ஜேர்மானிய பேராசிரியர்

சுவிசில் பணிபுரியும் ஜேர்மனை சேர்ந்த பேராசிரியர் ஒருவர், வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
சுவிசில் கடந்த 9ம் திகதி நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள், மிக இறுக்கமான வெளியுறவு கொள்கைக்கு வழிவகுத்துள்ளது.
எனவே வருகிற 3 ஆண்டுகளில் சுவிசில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 1999ம் ஆண்டு முதல் சுவிசிற்கு குடிபெயர்ந்து, சூரிசின் தொழில்நுட்ப மத்திய நிலையத்தில்(Federal Institute for Technology) பணிபுரியம் கிறிஸ்டோபர் ஹோக்கர் என்ற ஜேர்மானிய பேராசியர் தற்போது தன் வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து கிறிஸ்டோபர் கூறுகையில், சுவிசில் உள்ள நிலைமை குறித்து அதிகளவு பேச விரும்பவில்லை என்றும், தங்களது உதவி இல்லாது சுவிஸ் எவ்வாறு இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் எனவும் பேட்டியளித்துள்ளார்.
மேலும் இந்த முடிவினை மாணவர்களுடனான எந்தவித கருத்துவேறுபாட்டிலோ, பிரச்சனைகளாலோ எடுக்கவில்லை என்றும், ஜேர்மனியின் ஆக்ஸ்பெர்க் நகரில் பணியை தொடரப் போவதாகவும் கூறியுள்ளார்.
இவரது செயல் ”அதிகப்பிரசங்கி” தனமாக உள்ளது என 73.3 சதவீத மக்கள் ஓன்லைனில் தெரிவித்துள்ளதாக சூரிச் நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.