புதன், 19 பிப்ரவரி, 2014

சுவிசில் பலி எடுக்கும் பனிச்சறுக்கு

 
பனிச்சறுக்கில் ஈடுப்பட்டிருந்த அமெரிக்க நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சுவிசில் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாகவே பனிச்சறுக்கால் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் சுவிசின் வாலிஸ் மலைப்பகுதி பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த அமெரிக்க நபர், இரண்டு பாறைகளுக்கு இடையே இருந்த பனிக்கட்டியால் இழுத்து செல்லப்பட்டார்.

இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பனியில் புதைந்த அந்நபரை தொண்டி எடுத்ததுடன், ஹெலிகாப்டரின் மூலம் சியன் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கு முன்தினமே ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 21 வயது வாலிபர் பனிச்சறுக்கில் பலியானார்.

இதேபோல் கடந்த வாரம் இங்கிலாந்தை சேர்ந்த இருவர் பலியாகியது குறிப்பிடதக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.