செவ்வாய், 21 ஜனவரி, 2014

50 ஆண்டுகளுக்கு பின்னர் தென்கொரியாவின் பாராட்டு மழையில் சுவிஸ்

 தென்கொரிய ஜனாதிபதி 50 ஆண்டுகளுக்கு பின்னர் சுவிஸ் நாட்டிற்கு வருகை புரிந்துள்ளார்.
இதற்கு முன் கடந்த 1963ம் ஆண்டு இராஜதந்திர உறவுகளை பற்றி சுவிஸ், தென்கொரியா கலந்துரையாடியது.

அதன்பின்னர் 50 ஆண்டுகள் கடந்து நேற்று தான் சுவிஸ் தென் கொரிய சந்திப்பு நடைபெற்றது.
தென் கொரிய ஜனாதிபதி தலைநகர் பேர்னில் இராணுவ மரியாதையுடன் வறவேற்கப்பட்டார்.
இவர் வருகை பற்றி வறவேற்பு உறையாற்றிய சுவிஸ் ஜனாதிபதி டிடியர் கூறுகையில், கண்டுபிடிப்பு மற்றும் பாரம்பரியம் ஆகிய இரண்டால் இணைக்கப்பட்ட இரு நாடுகளுக்கும் பொருளாதாரத்தில் போட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சுவிஸ் பற்றி தென் கொரிய ஜனாதிபதி கூறுகையில், சுவிஸ் நாடானது பல நோபல் பரிசுகள் பெற்று படைப்பாற்றலுக்கு ஆதாரமாய் உள்ளது என்றும் குறிப்பாக ஆராய்ச்சி, அறிவியல், மருந்து, சுற்றுலா துறை, மற்றும் கல்வி துறையில் சிறந்து விளங்குகிறது எனவும் பாராட்டியுள்ளார்.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.