புதன், 1 ஜனவரி, 2014

சுவிஸ் திரும்பிய மார்கே வெபர்

ஆர்க்டிக் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மார்க்கோ வெபர் சுவிஸர்லாந்து திரும்பியுள்ளார்.
கிறீன் பீஸ்ஸின் சுவிஸ் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வெபர், ரஷ்யாவில் தனிச் சிறையில் இருந்து மிகவும் கடினமானதாக இருந்தாலும் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டமை வருத்தத்தை ஏற்படுத்தவில்லை என தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்டமை ஆரம்பத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது. சில வாரங்களின் பின்னர் அது சோர்வை ஏற்படுத்தியது என்றார்.
வெபர் கிறீன் பீஸ் நிறுவனத்தின் 30 செயற்பட்டாளர்களில் ஒருவர், டச்சு கொடியுடன் கூடிய ஆர்க்டிக் சன்ரைஸ் என்ற கப்பல் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரஷ்ய பாதுகாப்பு படையினர் கைப்பற்றப்பட்டது.
ரஷ்ய நாட்டின் எண்ணெய் அகழ்வு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ரஷ்ய படையினர் கப்பலை கைப்பற்றியதுடன் அதில் இருந்தவர்களையும் கைது செய்தனர்.
மிக நீண்ட நாட்கள் சிறையில் இருந்த அவர்களுக்கு ரஷ்யா பொதுமன்னிப்பை வழங்கியது.
இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட வெபர், இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிகாரிகள் ஒரு தீர்வை தேடுகின்றனர்.
நாங்கள் குற்றவாளிகள் அல்ல. குற்றம் சுமத்தப்படாமல் எங்கள் மீதுதான நடவடிக்கைக்கு ஒரு வழியை அவர்கள் தேடினர் என்றார்.

அதேவேளை இங்கு கருத்து வெளியிட்ட 28 வயதான மலையேறும் வீரர், ரஷ்யாவில் தாம் மோசமாக நடத்தப்படவில்லை என்றாலும் வெளியில் உள்ளவர்களுடன் தொடர்பில்லாமல் இருந்து மிகவும் கடினமானதாக இருந்தது என்றார்.
ரஷ்யாவில் விடுதலை செய்யப்பட்ட வெபர், ரஷ்யாவின் சென்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் இருந்து 50 மணித்தியால ரயில் பயணம் மூலமாக கடந்த திங்கட் கிழமை சுவிஸை அடைந்தார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.