புதன், 8 ஜனவரி, 2014

வாடிகன் நகரில் மேலோங்கும் ஓரினச்சேர்க்கை



புனித தலமாய் கருதப்படும் வாடிகன் நகரம் ஓரினச்சேர்க்கைகளால் நிறைந்துள்ளது என முன்னாள் சுவிஸ் காவல் உறுப்பினர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 5ம் திகதி இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பல்லாண்டுகளுக்கு முன்னர் வாடிகனில் காவல் உறுப்பினராக இருந்தபோது பல முறை கார்டினல்களாலும், ஆயர்களாலும்,குருக்களாலும்,பிற அதிகாரிகளாலும் ஓரினச்சேர்க்கைக்கு தூண்டிவிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் 20 மதகுருக்கள் என்னை தூண்டிவிடும் நோக்கில் சில்மிஷ கோரிக்கைகளை விடுத்து ஓரினச்சேர்கையில் என்னுடன் ஈடுபட முயன்றுள்ளனர்.
இவ்வகை ஓரினச்சேர்க்கையாளர்கள் மதகுரு என்ற போர்வையில் மக்களை வழிநடத்துபவன் போல் போலி வேடமிட்டு பதவி வகித்தால், அது மக்களின் கடவுள் பக்தியை கெடுத்து, தேவலாயத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையும் பாழாக்க வழிவகுத்துவிடும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “திருமணத்திற்கு வெளியே செக்ஸ் வைத்துக்கொள்வது பாவம் ,விவாகரத்து செய்வது என்பது வன்மையான செயலாகும் என மக்களை நோக்கி கூறும் மதக்குருக்கள் ஓரினச்சேர்க்கைக்கு மட்டும் ஆதரவளிப்பது மிகுந்த வெறுப்பும் வேதனையையும் தருகிறது.
எனவே தற்போதைய வாடிகனில் போப்பாக பதவியிலிக்கும் போப்பும் இந்த ஓரினசேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இதில் ஈடுப்பட்ட யாரையும் மதகுருவாக நியமிக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.