வெள்ளி, 31 ஜனவரி, 2014

ரத்த வெள்ளத்தில் மனைவி! தப்பியோடிய கணவன்


சுவிசில் மனைவியை கொல்ல முயன்ற கணவன், நாட்டை விட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிசின் ஆர்கெவ் மாகாணத்தில் தம்பதியினர் ஒருவர் வசித்து வந்துள்ளனர், திருமணமாகி ஓராண்டு கடந்த நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 27ம் திகதி தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கொலை செய்ய துணிந்துள்ளார்.

கொடூர தாக்குதல் நடத்திய நபர், பின்னர் தப்பியோடி விட்டார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தப்பியோடிய குற்றவாளியை கைது செய்ய பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து பொலிசார், பாதிக்கப்பட்ட இப்பெண்ணின் கணவனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளதாகவும், விரைவில் கைது செய்து விடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அல்பேனியாவை சேர்ந்த இக்குற்றவாளி தன் பூர்வீக இடமான கொசோவொவிற்கு சென்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.