திங்கள், 27 ஜனவரி, 2014

கூக்குரல்: தொடர்ந்து சூடு பிடிக்கும் உலக பொருளாதார மாநாடு

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் வெறும் 16 சதவீத பெண் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
சுவிசின் டாவொஸ் நகரத்தில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வணிகர்கள், செல்வந்தர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் உட்பட 2500 பேர் கலந்து கொண்டனர்.
இதில் கடந்தாண்டு 17 சதவீதம் பங்கேற்ற பெண் பிரதிநிதிகள் இவ்வாண்டு 16 சதவீதமாக குறைந்துள்ளனர்.

எனவே கடந்த 25ம் திகதி பெண்களுக்கான ஒதுக்கீடுகளை அதிகரிக்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டைன் லகர்டி கூறுகையில், பெண்ணாக இருப்பதால் என் ஆரம்பகால வாழ்க்கையில் ஊக்கத்தை குலைக்கும் வகையில் எல்லோரும் என்னை ஏளனமாய் பேசினர் என்றும் பெண்களின் ஒதுக்கீடு சதவீதம் எல்லா வேலைத்துறைகளிலும் கண்டிப்பாக உயர்த்த பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆண், பெண் கலாச்சார பாகுபாடுகளை நீக்க வேண்டும் என பேஸ்புக்கின் தலைமை அதிகாரி ஷெரில் சான்பெர்க் கூறியுள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.