புதன், 29 ஜனவரி, 2014

உணவுப்பொருட்களை வீணடிக்கும் சுவிஸ் மக்கள்


சுவிஸ் நாட்டு மக்கள் அதிக உணவுப்பொருட்களை வீணடிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அலுவலகமானது 33 மாநகராட்சிகளில் 16.5 டன் குப்பைகளை அலசி ஆராய்ந்து பார்த்ததின் விளைவாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 30 கிலோ உணவுப்பொருட்களை ஒவ்வொரு சுவிஸ் நாட்டு குடிமகனும் குப்பைகளில் கொட்டுகிறான். அதில் நிச்சயமாக பாதியளவு உணவுகள் பயன்படுத்தப்படாத நல்ல வகை உணவுகள் என்றும் மேலும் தரமான உணவுப்பொருட்கள் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் 2.20.000 டன் எடையுள்ள செய்தித்தாள்களை சுவிஸ் நகர மக்கள் குப்பைத்தொட்டிகளில் கொட்டுகின்றனர், இந்த பேப்பர்களை மறுசுழற்சி கூடைகளில் போட்டால் அதை மறுபடியும் பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பு வாய்ப்புள்ளது.

அதேபோல், 60.000 டன் எடையுள்ள கண்ணாடிப்பொருட்களையும் குப்பையில் போடுகின்றனர், இவற்றையும் மறுசுழற்சி தொட்டிகளில் போட்டால் அதனை கண்ணாடி பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் பயன்படுத்த இயலும்.


இந்த ஆய்வு அறிக்கையின்படி, சுவிஸ் நாட்டு மக்கள் கொட்டும் குப்பைகளில் ஐந்தில் ஒரு பங்கு குப்பைகள் மீண்டும் உபயோகப்படுத்தக்கூடிய நல்ல தரமான பொருட்கள்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.