திங்கள், 30 டிசம்பர், 2013

தாமதமாக வருகை தந்த வெள்ளை கிறிஸ்துமஸ்

சுவிஸின் வடக்கு ஆல்ப்ஸ் பகுதியில் வசிப்பவர்களுக்கு பொதுவாக கிறிஸ்துமஸ் காலத்தில் அமையும் வெள்ளை கிறிஸ்துமஸ் இவ்வாண்டு சற்று தாமதமாகவே அமைந்துள்ளது.
கடந்த டிசம்பர் 26ம் திகதி ஆல்ப்ஸ் மலையின் வடக்கு பகுதியில் 20 முதல் 40 சென்டீமீற்றர்கள் பனியால் சூழப்பட்டது என RTS செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

“பாக்சிங் டே” என அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் மறுநாளில் உயர்ந்த மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் வெள்ளை கம்பளத்தை விரித்தது போல பனி படர்ந்து அழகாய் காட்சியளித்தது.
இதனைத் தொடர்ந்து தெற்கு இத்தாலிய பேசும் காண்டனில் ஒரு மீற்றர் தூரத்திற்க்கு பனி படர்ந்திருந்தது.

இதுகுறித்து பனிச்சரிவு ஆய்வாளர்கள் கூறுகையில், சுவிஸில் பனியின் தாக்கம் 120 செண்டிமீட்டராய் பதிவாகியுள்ளது. கடந்த 61 ஆண்டுகளாய் வரலாறு காணாத அளவில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இதற்கிடையில் டிக்கினோவில் குறைந்த தட்பவெப்பத்தால் கிறிஸ்துமஸ் மற்றும் பாக்சிங் டே ஆகிய தினங்களில் பிற்பகல் வரை தொடர் கனமழை பெய்தது. இதனால் லுகானூ ஏரிக்கு அபாயம் உள்ளது என அறிவிக்கப்பட்டது.

இக்கனமழை புயலாக மாறி மத்திய சுவிஸ் பகுதி,வாயூத் என்ற மாவட்டம் மற்றும் சில நகரங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. மேலும் ரயில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.