புதன், 18 டிசம்பர், 2013

திடீர் தீவிபத்து: சிரமத்திற்குள்ளான இருவர்

சுவிசின் சூரிச் மாகணத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் எல்லையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் இரண்டு பேர் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு ஏற்பட்ட கட்டிட தீவிபத்தில் மூன்றுமாடி கட்டிடத்தில் மூன்றாவது மாடியின் மேல் தீப்பற்றி கொண்டது.

இதனால் ஏற்பட்ட புகையை சுவாசித்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பெரும் போராட்டத்திற்கு பின்பே தீயை அணைக்க முடிந்தது என்று கூறியுள்ளனர்.

மேலும் இத்தீவிபத்தால் மூன்று மாடி கட்டிடத்தின் இரண்டு தளங்களும் சாம்பலாகி கருகிவிட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.