புதன், 18 டிசம்பர், 2013

கொலைகுற்றத்தால் மனம் நொந்த காதலி

 சுவிஸ் நாட்டு பெண் ஒருவர் தன் காதலனை கொலை செய்த குற்றத்திற்காக வருந்துவதாக தொலைக்காட்சி செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.

சுவிஸ் நாட்டு பெண் ஒருவர் பிரான்சை சேர்ந்த தன் காதலரான வங்கியாளரை கடந்த 2005ம் ஆண்டு சுட்டு கொன்றுள்ளார்.

இதனை தொடர்ந்து இவருக்கு 8 அரை வருடம் சிறை தண்டனை விதித்து ஜெனிவா நீதிமன்றம் தீர்பளித்தது.

அதில் ஏற்கனவே 4 வருடங்கள் அவர் ரிமாண்டில் வைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்துள்ளார்.
இதுகுறித்து தொலைகாட்சியில் அவர் வெளியிட்ட செய்தியில், இக்கொலை சம்பவம் நிகழ்ந்த போது தன் மனநிலை சரியில்லை என்றும் தான் எழுதிய கடிதம் தொலைகாட்சி செய்தி எந்நேரத்தில் வெளியானது என எனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.

மேலும் இப்பிரெஞ்சு வங்கியாளர் மிக பெரும் செல்வந்தர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி நிக்கேலஸ் சர்கோசியின் நெருங்கிய நண்பரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.