சனி, 21 டிசம்பர், 2013

பேச்சுரிமையை இழந்த பேச்சாளர்: சுவிஸ் தடாலடி

சுவிட்சர்லாந்தில் எகிப்திய போதகரின் கடுமையான சொற்பொழிவை கண்டித்து அந்நாட்டு அரசு, அவர் சொற்பொழிவாற்ற தடை விதித்துள்ளது.
 சில மாதங்களுக்கு முன்பு சுவிஸில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இவர் ஆற்றிய சொற்பொழிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில், இஸ்லாம் மதத்தை மறந்து அதன் நம்பிக்கையை துறக்கும் இஸ்லாமியர்களுக்கு மரண தண்டனையே உகந்த தண்டனையாகும் என தடாலடியாக அறிக்கையை விடுத்துள்ளார்.
இதனைதொடர்ந்து ”சுவிஸ் சூப்பர் லீகின்” மற்றும் ”பேசல் கால்பந்தாட்ட குழுவின்” முக்கிய கால்பந்தாட்ட வீரரான எகிப்திய வீரரையும் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

ஆனால் இதுபோன்ற சொற்பொழிவுகள் இன்னும் தொடர்ந்தால் கலவரம் ஏற்பட பல வாய்ப்புகள் உள்ளது என்பதால் ஜெனிவாவில் கடந்த சனிக்கிழமையன்று நடக்கவிருந்த அவரின் மற்றொரு சொற்பொழிவு மாநாட்டை சுவிஸ் பொலிசார், கூட்டமைப்பு அலுவலகம் மற்றும் மத்திய இடம்பெயர்த்தல் அலுவலகம் தடை செய்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.