வெள்ளி, 20 டிசம்பர், 2013

விலைமாதுக்களுக்கு அல்வா கொடுத்த மோசடி மன்னன்

 ஜெனிவாவில் 20க்கும் மேற்பட்ட விலைமாதுக்களிடம் ரியல் எஸ்டேட் உரிமையாளர் 3 மில்லியன் பிராங்குகளை மோசடி செய்துள்ளனர்.
ஜெனிவாவில் 40 வயது நிரம்பிய ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஒருவர் மசாஜ் பார்லர்களில் வேலை செய்யும் பெண்களை குறிவைத்து தம் மோசடியை அரங்கேற்றியுள்ளார்.

இப்போலி ஆசாமி அப்பெண்களிடம் நிலம் மற்றும் சொத்துக்களை விற்பதாக கூறி போலி வரைபடங்கள், புராஜட்கள் மற்றும் பத்திரங்களையும் காண்பித்து இதற்கு முதலீடாக பணம் செலுத்த வேண்டும் என கூறி பணம்பரித்துள்ளான்.

ஆனால் RTS என்ற தொலைக்காட்சியின் அறிக்கையில் ”தனக்கும் இச்சம்பவத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும் நான் இதற்கு பொறுப்பேற்க இயலாது என அவர் கைவிரித்துள்ளார்.
இதனால் இவரிடம் ஏமாந்த பெண்கள் தங்கள் வாழ்வாதார சேமிப்பை இழந்துள்ளனர்.
மேலும் இப்பெண்களிடம் சுருட்டிய பணத்தையெல்லாம் இம்மோசடி மன்னன் செலவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.