வெள்ளி, 27 டிசம்பர், 2013

சுவிஸை உலுக்கிய புயல்காற்று

சுவிஸில் கடும் புயல்காற்று வீசியதால் நேற்றைய கிறிஸ்துமஸ் தினத்தில் மலைரயில் மற்றும் கேபிள்கார் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இக்கடும் புயல் ஐரோப்பாவின் மிக உயரமான ரயில்வே என்ற பெருமையை கொண்ட தலைநகரம் பேர்னில் இருக்கும் ”ஜங்க்ப்ராவ் இரயில் நிலையத்தில்” இரயில் பாதைகள் கடும் பாதிப்பிற்குள்ளானது.
இந்நிலையில் இங்கு ரயில் ஒன்று வீட்டின் மீது மோதி அவ்வீடு

 புயல் காற்றினால் தள்ளப்பட்டு ரயில் பாதையில் வந்து விழுந்தது.இதனைதொடர்ந்து நேற்று முன்தினம் மத்திய சுவிஸில் உள்ள சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு பின்பு கிறிஸ்துமஸ் தினமான நேற்று சரி செய்யப்பட்டது.

இப்புயலின் தாக்கம் குறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது, மத்திய சுவிஸில் புயல் காற்றின் சீற்றம் 208 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியது. பின்பு கிறிஸ்துமஸின் முந்தைய இரவு ரைன் பள்ளதாக்கில் 110 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியது.

மேலும் நேற்று குளிர்பனி படர தொடங்கியதால் புயல்காற்று நின்று உடனே மழையும் பனிப்பொழிவையும் ஏற்படுத்தியது. இதன் பின்னர் சுவிஸில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.