புதன், 25 டிசம்பர், 2013

சுவிஸில் தஞ்சமடைய ரஷ்ய தொழிலதிபர் முயற்சி


ரஷ்யா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தொழிலதிபர் கோடோர்கோவ்ஸ்கி சுவிஸ் தூதரகத்தில் விசாவிற்காக விண்ணப்பித்துள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த கோடோர்கோவ்ஸ்கி என்ற தொழிலதிபர் நிதிமோசடியில் ஈடுபட்டதால் ரஷ்ய அரசு இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதனை தொடர்ந்து அடுத்த வருடம் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்யப்படுவதாக இருந்த இவர் பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புதினால் மன்னிக்கப்பட்டு கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டார்.

இவரின் மனைவி மற்றும் இரட்டை மகன்கள் ஜேர்மனில் வசித்து வருகின்றனர். இதையடுத்து ஜேர்மன் சென்ற இவருக்கு ஜேர்மன் அரசாங்கம் ஒரு வருட காலமே தங்குவதற்கு அவகாசம் அளித்துள்ளது
இதனால் தன் சொத்துகளை சுவிஸ் வங்கியில் போட்டுவிட்டு குடும்பத்தினருடன் சுவிஸில் நிரந்தரமாக தங்குவதற்காக சுவிஸ் தூதரகத்தில் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார்.
மேலும் தன் 10 வருட சிறைவாசத்தை குறித்து தான் மிகவும் வெட்கப்படுவதாகவும் பல வேதனைகளை அனுபவித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.