புதன், 18 டிசம்பர், 2013

லீலைமன்னனின் ஆட்டத்திற்கு ஓர் முற்றுப்புள்ளி

 சிறுமிகளை சீரழித்து வந்த நீதி மேலாளர் ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஜெனிவா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜெனிவாவை சேர்ந்த 64 வயது மதிக்கதக்க நீதிமேலாளர் ஒருவர், பட்டியலிட்டு கூறும் அளவில் பல சிறுமைகளை திட்டமிட்டு பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டில் நியான் மாநகராட்சியில் கிளாண்ட் என்ற இடத்தில் 11 வயது சிறுமியிடம் பழுது பார்க்க வந்த பணியாளை போல் நடித்து வீட்டினுள் நுழைந்து கத்தி முனையில் அச்சிறுமையை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
இதனைதொடர்ந்து நீச்சல்குளத்தில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடக்க முயன்றபோதும் தண்டிக்கப்பட்டார்.

மேலும் கடந்தாண்டு மற்றொரு சிறுமியை பாலத்காரம் செய்ய முயன்ற போது கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஜெனிவா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் பெடோபைல் என்ற மனநோயால் பாதிக்கப்பட்ட இந்த 64 வயது மனிதர் தண்டனை காலம் முடியும் முன்பே உயிர் துறப்பார் என்றும் ஓன்லைன் தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.