வெள்ளி, 31 ஜூலை, 2015

கார்ரை ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்

சுவிட்சர்லாந்தில் கார் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இந்த பயங்கர விபத்து Unterkulm Teufenthal - Wynentalstrasse பகுதிக்கு இடையே நடந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், காரின் ஓட்டுனர் வேகமாக வந்ததுடன் ரயில் பாதையை கடக்க முயன்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் எதிர் வரிசையில் வந்த வாகனங்களால் அவரால் ரயில் பாதையை கடக்க முடியவில்லை.
இதனால் ரயில் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட அவரது வாகனத்துடன் அவ்வழியாக வந்த ரயில் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் காரில் பயணம் செய்த பெண் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து நடந்ததை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சாலைகளை மூடிவிட்டு விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தினர்.
அப்பகுதியில் உள்ள பயணிகளுக்காக மாற்று பேருந்து இயக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், வாகன ஓட்டிகள் அந்த பாதையை பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர்.
இதனால் அப்பகுதி வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளயினர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.