ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

அதிர்ஷ்டவசமாக மலைச்சரிவிலிருந்து உயிர்தப்பிய 1 வயது குழந்தை




சுவிட்சர்லாந்தின் மலைச்சரிவில் நடந்த மோசமான விபத்தில் ஒரு குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளது.
சுவிஸில் அல்ப் பார்லி என்னும் மலைச்சரிவு உள்ளது. இதன் வழியாக ஏதேனும் பொருட்களை எடுத்துச் செல்லும் வண்டிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் 38 வயதுடைய சுவிஸ்ஸை சேர்ந்த நபர் தனது 31 வயதுடைய கனடிய மனைவி மற்றும் ஒரு வயது குழந்தை ஆகியோருடன் பயணம் செய்துள்ளார்.
அப்போது வாகனமானது 30 மீற்றர் வேகத்தில் சென்றுகொண்டிருக்கையில் திடீரென்று நிலைதடுமாறி மலையிலிருந்து கீழே விழுந்ததில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர்.
ஆனால், குழந்தையானது மரத்தின் கிளைகளின் இடையே சிக்கி காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது.
இந்த விபத்து குறித்து பொலிசார் கூறுகையில், இந்த மலைப்பகுதியானது மக்கள் பயணம் செய்வதற்கு தடைசெய்யப்பட்ட பகுதியாகும்.
ஆனால் ஒரு குடும்பத்தினரை இந்த வழியாக பயணம் செய்வதற்கு அனுமதித்த உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது குழந்தையானது பாதுகாப்பாக உள்ளது எனவும் கூறியுள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.