திங்கள், 19 ஆகஸ்ட், 2013

மனிதர்களுக்கு போட்டியாக நீந்துவதற்கு களம் இறங்கிய குரங்குகள்(


சுவிஸ் நாட்டில் மனிதர்களுக்கு போட்டியாக நீந்துவதற்கு சிம்பன்சி மற்றும் உரங்கொட்டான் குரங்குகளுக்கு பயிற்சி கொடுத்து இரு ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பொதுவாக குரங்கு இனமானது மிருகக்காட்சி சாலைகளில் மனிதர்களின் பார்வைக்காக அடைத்து வைக்கப்படுகின்றன. ஆனால் இந்த வகை இனமும் மனிதர்களுக்கு இணையாக நீச்சல் பயிற்சியில் சிந்தித்து செயல்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பெர்ன் பல்கழைக்கழகத்தின் பரிணாமம் மற்றும் தொற்றுநோய் ஆராய்ச்சியாளர் நிக்கோல் பெண்டர்(Nicole Bender) கூறுகையில், குரங்குகளுக்கு முதலில் இரண்டு மீட்டர் ஆழமான பகுதியில் கயிறு கட்டி நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.
சில வாரங்களுக்கு பின்பு அவர்கள் தானகவே மேற்பரப்பில் நீந்த தொடங்கிவிட்டனர். தற்போது நீச்சல் மற்றும் டைவ் அடிப்பது போன்ற செயல்களில் மும்முரமாக சிம்பன்சி மற்றும் மனிதகுரங்கு ஈடுபட்டு வருகின்றன.
மேலும் குரங்குகள் நீச்சல் மற்றும் டைவ்விங் அடிப்பது குறித்து ஏற்கனவே குறிப்புகள் எடுக்கப்பட்ட போதும் அவை படமாக வெளியிடப்படவில்லை. தற்போது அமெரிக்காவின் மானிடவியல் ஆராய்ச்சி பதிப்பானது இந்த ஆராய்ச்சியினை படமாக வெளியிட்டுள்ளது என நிக்கோல் பெண்டர் தெரிவித்துள்ளார்.
{வீடியோ இணைப்பு) }

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.