செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

எரித்துக் கொன்ற தந்தை இரண்டு மகள்களை!!!


சுவிட்சர்லாந்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை கடத்தி கொண்டு சென்று எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் செமிபோடிலி என்ற இடத்தில் உள்ள இரண்டு மற்றும் ஐந்து வயது குழந்தைகள் இறந்து கிடந்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதில் அங்கு குழந்தைகள் காருக்குள் எரிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் தந்தை சிறிது கிலோ மீட்டர் இடைவெளியில் ஆபத்தான நிலையில் எரிந்து கிடந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில், இவர் தனது குடும்ப உறுப்பினர்களின் அனுமதியில்லாமல் தனது குழந்தைகளை அழைத்துச் சென்றுவிட்டதாக இவரது மனைவி பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் விபத்திற்கான காரணம் குறித்து அறியப்படாத நிலையில், இவரே தனது குழந்தைகளை வைத்து காரினை எரித்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.