வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சுவிஸில் விபச்சாரம் நடத்தும் சீன நாட்டு பெண்மணி


சுவிட்சர்லாந்தில் 56 வயது சீன பெண் ஒருவர் விபச்சார தொழில் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெனிவாவில் உள்ள புறநகர் பகுதியான லேன்சி என்னும் இடத்தில் 56 வயது சீன பெண் ஒருவர் மசாஜ் நிலையம் நடத்தி வந்துள்ளார்.
அங்கு விபசாரம் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து பொலிசார் நடத்திய சோதனையில் அப்பெண்ணும், அவருடன் சேர்ந்து 5 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
இவருடைய அலுவலகத்தில் பணிபுரியும் விலைமாதர்களுக்கு அதிகமான ஊதியங்கள் வழங்கப்படுவதோடு, வாடிக்கையாளர்களும் தினசரி குவிகின்றன.
பின்பு நடைபெற்ற விசாரணையில், இவர் சுவிஸில் தவறான வழியில் தங்கியிருந்து விபச்சார தொழிலை நடத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள குறித்த பெண்மணி, தான் விபச்சார தொழில் நடத்தவில்லை என்றும், தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு பாலியல் ரீதியாக இல்லாமல் அவர்களின் உடலுக்கு தேவையான மாசஜ்களை செய்து விடுவதாகவும் கூறியுள்ளார்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.