புதன், 21 ஆகஸ்ட், 2013

தலைமை நிர்வாக சுவிஸ்காமின் அதிகாரி மரண அறிக்கை !!!


சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமான சுவிஸ்காமின்(Swisscom) தலைமை நிர்வாக அதிகாரியின் தற்கொலை குறித்து இணையதளம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுவிஸ் நாட்டில் உள்ள சுவிஸ்காம்(Swisscom) நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ஸ்கோல்டர்(Schloter)(49). இவர் கடந்த யூலை மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
இவரது மரணமானது பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், ஸ்கோல்டர் தனது குடும்ப வாழ்க்கை காரணமாகவே தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை விட்டு தனியாக வாழ்ந்துவந்தார். இதனைத் தொடர்ந்து தனது அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இளம் பெண்ணுடன் காதல் கொண்டார்.
பின்பு இந்த வாழ்க்கையும் கசந்த பிறகு வாழ்க்கையில் வெறுத்துப்போன இவர் தான் நிஜ வாழ்க்கையில் தோற்றுவிட்டதாகவும், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்காக ஏங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நான் வாழ்க்கையில் நிறைய தவறுகள் செய்திருக்கலாம் அவை அனைத்தும் தவறு என்று உணர்ந்துகொண்டேன் என்று கடிதத்தில் எழுதியுள்ளார். இவருடைய கடிதத்தினை அந்நாட்டு இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. மேலும் இவர் ஒரு சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி என்று சுவிஸ்காம் புகழாரம் சூடியுள்ளது எமதுஇந்தஇணயத்த்தின்ஆழ்ந்தஅனுதாபத்தைத்தினைதெரிவிக்கின்றோம்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.