வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சுவிஸ் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம்: நடிகை


 சுவிஸில் நடைபெற்ற இனபாகுபாட்டிற்கு அந்நாடு தன்னிடம் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என நடிகை ஒபரா வின்பிரே தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரப் பெண்களில் ஒருவராக திகழும் வின்பிரே(வயது 59), சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு சென்றிருந்தபோது அங்குள்ள மிகப்பெரிய வர்த்தக நிறுவனத்தில் ஷாப்பிங் மேற்கொண்டார்.
அப்போது அக்கடை ஊழியர்கள் அங்குள்ள விலை உயர்ந்த கைப்பையை காட்ட மறுத்ததால், அவர்கள் தன் மீது இனபாகுபாடு காட்டியுள்ளனர் என்று சர்ச்சையை கிளப்பினார்.
இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோருவதாக சுவிஸ் நாட்டு சுற்றுலாத்துறை தெரிவித்திருந்தது.
இதுகுறித்து வின்பிரே கூறுகையில், வர்த்தக நிறுவனத்தின் ஊழியர் கைப்பையை பார்க்கும் வாய்ப்பை எனக்கு அளிக்காதது ஒரு பிரச்சனை இல்லை.
எனவே சுவிட்சர்லாந்து என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவில் யாரேனும் ஒருவர் இந்த தவறினை செய்திருந்தால் நாடானது முன்னின்று மன்னிப்பு கேட்காது என்றும் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.