புதன், 28 ஆகஸ்ட், 2013

காப்பீட்டு நிறுவன தலைமை அதிகாரி மரணம்: பொலிசார் விசாரணை


சுவிஸின் காப்புறுதி தலைமை நிதி அதிகாரி பியர் வாதியர் (Pierre Wauthier) தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் சூரிச் காப்பீட்டு நிறுவனமானது மிகப்பெரிய நிறுவனமாகும்.
இந்நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்த பியர் வாதியர் (Pierre Wauthier) தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
1960ம் ஆண்டு பிறந்த வாதியர் 1982ம் ஆண்டு முதல் KPGM நிறுவனத்தின் மூலம் தனது தொழில் வாழ்க்கையை தொடங்கியுள்ளார். பின்பு பிரான்சில் வெளியுறவு அமைச்சராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து 1996ம் ஆண்டு சூரிச் காப்பீட்டு நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள இவர் 2011ம் ஆண்டு தலைமை அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தற்போது இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து தகவல் வெளிவராத நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவிஸில் கடந்த மாதம் சுவிஸ்காம் நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் இதேபோன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.