ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

ரயில் விபத்தில் பலியான ஒட்டுனருக்கு சக பயணிகள் அஞ்சலி


சுவிட்சர்லாந்தில் கிராஞ்–பெரிஸ்–மார்னான்ட் என்னும் இடத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேராக மோதிக்கொண்டதில் 24 வயது இளம் ஒட்டுனர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்த ஒட்டுனருக்கு ரயில்வே பணியாளர்கள் சங்கம் தங்கள் குடும்பத்தாருடன் அஞ்சலி செலுத்தினார்கள்.
ரயில் விபத்து நடந்ததில் 25 நபர்கள் காயமடைந்துள்ளனர். இவர் ஒருவர் மட்டுமே இறந்துள்ளார்.
இந்த விபத்தில் பலியான இவர் சமீபத்தில் தான் ஒட்டுனர் பதவியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது இறுதி அஞ்சலியில் ஜெனிவாவின் தலைமை நிர்வாகி ஆன்ரியாஸ் மேயர் (Andreas Meyer) உட்பட மத்திய ரயில்வே நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ரயில்வே ஒட்டுனர்கள் தனிப்பட்ட முறையில் கலந்து கொள்ளாமல் தங்கள் குடும்பத்தினருடன் அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தானது சுவிஸில் நடைபெற்ற மோசமான ரயில் விபத்து என்று விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.