வியாழன், 22 ஆகஸ்ட், 2013

மனைவியை சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்த


சுவிட்சர்லாந்தில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியை சுட்டு விட்டு, தன்னையும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு மரணமடைந்துள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரிச் நகரில் உள்ள பொம்மை விற்கும் கடையின் கார்நிறுத்தப் பகுதியில் இச்சம்பவமானது நடைபெற்றுள்ளது.
சம்பவதினத்தன்று தம்பதிகள், தனது மூன்று வயது குழந்தையுடன் பொம்மை கடைக்கு சென்றுள்ளனர்.
அப்போது அக்கடையின் கார் நிறுத்தும் இடமான சுரங்கப்பாதையில் வைத்து தன்னுடைய மனைவியை துப்பாக்கியால் சுட்டுள்ளார், பின்பு தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிழந்துள்ளார்.
இதில் அப்பெண் மட்டும் பலத்த குண்டடிபட்ட காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தை நேரில் பார்த்த மகள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.