செவ்வாய், 25 மார்ச், 2014

திறனை வெளிப்படுத்திய ஹாக்கர்கள்

சுவிசின் ஜெனிவா மாகாணத்தில் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனம் ஒன்றினால் ஹாக்கர்களுக்கான மாநாடு ஒன்று நடைபெற்றது.

ஆறாவது வருடாந்திர மாநாடான இதில் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் சுமார் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் கலந்துகொள்பவர்கள், தளம் ஒன்றை கண்டறிந்து அதன் பயனர் பெயர்(username) மற்றும் கடவுச்சொல்லினை கண்டுபிடிக்க வேண்டும்.

மேலும் வங்கி மற்றும் நிதி அலுவலங்களின் மென்பொருளில் சட்டவிரோதமாக ஊடுருவி ஹாக்கிங் செய்து பணத்தை கையாடல் செய்யும் திருடர்களை பிடிப்பதே இவர்களின் முக்கிய பொறுப்பாகும்.
இம்மாநாட்டில் மிக சிறந்த நன்னெறி ஹாக்கிங் நிபுணர்கள் பங்கேற்று கருத்து பறிமாற்றம் செய்தது மட்டுமல்லாமல் தங்களுக்குள்ளேயே போட்டிகளை வைத்துக்கொண்டு திறனை வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிபுணர்களால் பிரபல சமூக வலைத்தளமான யாஹூ மற்றும் மென்பொருள் ஆரகிலில் சட்டவிரோதமாய் நிகழ்ந்த நெளிவு சுளிவுகள் கண்டறியப்பட்டன.

                                

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.