திங்கள், 30 டிசம்பர், 2013

தாமதமாக வருகை தந்த வெள்ளை கிறிஸ்துமஸ்

சுவிஸின் வடக்கு ஆல்ப்ஸ் பகுதியில் வசிப்பவர்களுக்கு பொதுவாக கிறிஸ்துமஸ் காலத்தில் அமையும் வெள்ளை கிறிஸ்துமஸ் இவ்வாண்டு சற்று தாமதமாகவே அமைந்துள்ளது. கடந்த டிசம்பர் 26ம் திகதி ஆல்ப்ஸ் மலையின் வடக்கு பகுதியில் 20 முதல் 40 சென்டீமீற்றர்கள் பனியால் சூழப்பட்டது என RTS செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. “பாக்சிங் டே” என அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் மறுநாளில்...

வெள்ளி, 27 டிசம்பர், 2013

சுவிஸை உலுக்கிய புயல்காற்று

சுவிஸில் கடும் புயல்காற்று வீசியதால் நேற்றைய கிறிஸ்துமஸ் தினத்தில் மலைரயில் மற்றும் கேபிள்கார் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இக்கடும் புயல் ஐரோப்பாவின் மிக உயரமான ரயில்வே என்ற பெருமையை கொண்ட தலைநகரம் பேர்னில் இருக்கும் ”ஜங்க்ப்ராவ் இரயில் நிலையத்தில்” இரயில் பாதைகள் கடும் பாதிப்பிற்குள்ளானது. இந்நிலையில் இங்கு ரயில் ஒன்று வீட்டின் மீது மோதி...

புதன், 25 டிசம்பர், 2013

சுவிஸில் தஞ்சமடைய ரஷ்ய தொழிலதிபர் முயற்சி

ரஷ்யா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தொழிலதிபர் கோடோர்கோவ்ஸ்கி சுவிஸ் தூதரகத்தில் விசாவிற்காக விண்ணப்பித்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த கோடோர்கோவ்ஸ்கி என்ற தொழிலதிபர் நிதிமோசடியில் ஈடுபட்டதால் ரஷ்ய அரசு இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை தொடர்ந்து அடுத்த வருடம் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்யப்படுவதாக இருந்த இவர் பின்னர் ரஷ்ய...

தலைமறைவாகிய சுவிஸ் வங்கி நிறுவனர்

வரி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சுவிஸ் வங்கியின் நிறுவனரை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிரான்சின் முன்னாள் வரவு செலவு திட்ட நிதியமைச்சர் ஜெரோம் ஆசாக். இவர் தன்னிடம் இருந்த ஏராளமான பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்திருந்தார். இதன் பின் பொலிசார் ரெய்டின் போது பணத்தை குறித்த நிறுவனர் Dominique Reyl என்பவரின் கணக்கில் மாற்றிவிட்டு,...

சனி, 21 டிசம்பர், 2013

பேச்சுரிமையை இழந்த பேச்சாளர்: சுவிஸ் தடாலடி

சுவிட்சர்லாந்தில் எகிப்திய போதகரின் கடுமையான சொற்பொழிவை கண்டித்து அந்நாட்டு அரசு, அவர் சொற்பொழிவாற்ற தடை விதித்துள்ளது.  சில மாதங்களுக்கு முன்பு சுவிஸில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இவர் ஆற்றிய சொற்பொழிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், இஸ்லாம் மதத்தை மறந்து அதன் நம்பிக்கையை துறக்கும் இஸ்லாமியர்களுக்கு மரண தண்டனையே உகந்த தண்டனையாகும்...

வெள்ளி, 20 டிசம்பர், 2013

விலைமாதுக்களுக்கு அல்வா கொடுத்த மோசடி மன்னன்

 ஜெனிவாவில் 20க்கும் மேற்பட்ட விலைமாதுக்களிடம் ரியல் எஸ்டேட் உரிமையாளர் 3 மில்லியன் பிராங்குகளை மோசடி செய்துள்ளனர். ஜெனிவாவில் 40 வயது நிரம்பிய ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஒருவர் மசாஜ் பார்லர்களில் வேலை செய்யும் பெண்களை குறிவைத்து தம் மோசடியை அரங்கேற்றியுள்ளார். இப்போலி ஆசாமி அப்பெண்களிடம் நிலம் மற்றும் சொத்துக்களை விற்பதாக கூறி போலி வரைபடங்கள்,...

புதன், 18 டிசம்பர், 2013

லீலைமன்னனின் ஆட்டத்திற்கு ஓர் முற்றுப்புள்ளி

 சிறுமிகளை சீரழித்து வந்த நீதி மேலாளர் ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஜெனிவா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜெனிவாவை சேர்ந்த 64 வயது மதிக்கதக்க நீதிமேலாளர் ஒருவர், பட்டியலிட்டு கூறும் அளவில் பல சிறுமைகளை திட்டமிட்டு பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கியுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டில் நியான் மாநகராட்சியில் கிளாண்ட் என்ற இடத்தில் 11...

கொலைகுற்றத்தால் மனம் நொந்த காதலி

 சுவிஸ் நாட்டு பெண் ஒருவர் தன் காதலனை கொலை செய்த குற்றத்திற்காக வருந்துவதாக தொலைக்காட்சி செய்தி ஒன்றில் கூறியுள்ளார். சுவிஸ் நாட்டு பெண் ஒருவர் பிரான்சை சேர்ந்த தன் காதலரான வங்கியாளரை கடந்த 2005ம் ஆண்டு சுட்டு கொன்றுள்ளார். இதனை தொடர்ந்து இவருக்கு 8 அரை வருடம் சிறை தண்டனை விதித்து ஜெனிவா நீதிமன்றம் தீர்பளித்தது. அதில் ஏற்கனவே 4 வருடங்கள்...

திடீர் தீவிபத்து: சிரமத்திற்குள்ளான இருவர்

சுவிசின் சூரிச் மாகணத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் எல்லையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் இரண்டு பேர் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஏற்பட்ட கட்டிட தீவிபத்தில் மூன்றுமாடி கட்டிடத்தில் மூன்றாவது மாடியின் மேல் தீப்பற்றி கொண்டது. இதனால் ஏற்பட்ட புகையை சுவாசித்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ...

பணம் கொழிக்கும் நிலத்தடி பாதுகாப்பு வர்த்தகம்

டெல் டாவிஸ் என்ற உயர் தொழிற்நுட்ப தகவல் விபரங்களை பாதுகாக்கும் நிலையம் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையருகில் நிலத்தடி சுரங்கப் பாதையில் இயங்கி வருகின்றது. இந்த நிலையத்தில் பல நாடுகளை சேர்ந்த நபர்கள் சுவிஸ் வங்கிகளில் இரகசியமான வங்கி கணக்குகளை வைத்திருக்கும் விபரங்கள் மற்றும் இரகசிய தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த தகவல்களை அதன் உரிமையாளர்களை...

வியாழன், 5 டிசம்பர், 2013

ஜேர்மனில் மரணங்கள் குறித்து ஆய்வு!

ஜேர்மன் நாட்டில் கிட்டத்தட்ட 750 பேர் வலதுசாரி தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜேர்மனில் 1990 மற்றும் 2011ம் ஆண்டுகளில் 849 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால் தற்போதைய புள்ளி விபரத்தின் படி 60 நபர்கள் வலதுசாரி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால் இந்த தொடர்கொலைகளுக்கு...

திங்கள், 2 டிசம்பர், 2013

பணக்கார பட்டியலில் ‘காம்ப்ராட்’ குடும்பம்

சுவிட்சர்லாந்து நாட்டில் வெளியிடப்பட்ட பணக்கார பட்டியலில் காம்ப்ராட் குடும்பம் முதலிடம் பிடித்துள்ளது. சுவிஸ் வணிக இதழ் அந்நாட்டைச் சேர்ந்த 300 செல்வந்தர்கள் மத்தியில் அவர்களின் வருவாயின் அடிப்படையில் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சுவிஸ்நாட்டைச் சேர்ந்த இம்ராட் காம்ப்ராட்(74) என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். பல்வேறு வகையான தொழில்களை செய்து...

வெள்ளி, 29 நவம்பர், 2013

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! களைக்கட்டுகிறது சுவிஸ்

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதை தொடர்ந்து, சுவிஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.கிறிஸ்துமஸ் பண்டியையை முன்னிட்டு, மக்களை கவரும் விதமாக கடைகளில் பல புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வண்ணவண்ண விளக்குகளால் கடைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே சூரிஜ்(Zurich) மற்றும் லுகெர்னி(Lucerne) நகரங்களில் ரயில் நிலையம் அருகில் உள்ள கடைகள் Apps ஒன்றை...

வியாழன், 28 நவம்பர், 2013

சுவிஸ் எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த அமெரிக்கா

ஜெனிவாவில் இயங்கி வரும் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் ஊழல் நடைபெற்றுள்ளதால் அமெரிக்கா அபராதம் விதித்துள்ளது. ஜெனிவாவை சேர்ந்த வேதற்போட் சர்வதேச எண்ணெய் நிறுவனம் 100 நாடுகளில் 55,000 பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் சில நாடுகளில் லஞ்சமளித்து ஊழலில் ஈடுப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. 23 மில்லியன் டொலர்களை கடந்த 2003 ஆண்டு முதல்...

களைகட்டிய சாலைவரி ஸ்டிக்கர்!!!

சுவிட்சர்லாந்தில் விதிமுறைகளை மீறி சாலைவரி ஸ்டிக்கர் விற்கப்பட்டுள்ளதை மத்திய அதிகாரிகள் கண்டித்துள்ளனர். வாகனங்களில் ஒட்டப்படும் சாலைவரி ஸ்டிக்கர் டிசம்பர் மாதம் 1 திகதி விற்கப்படவுள்ளதாக அந்நாட்டு மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சுவிஸ் எலக்ட்ரானிக்ஸ் என்ற சில்லரை வணிக நிறுவனமானது 40 பிராங்குகள் பெருமானமுள்ள நெடுஞ்சாலை சாலைவரி ஸ்டிக்கர்களை...

புதன், 27 நவம்பர், 2013

சுவிட்சர்லாந்தில் ரயில் விபத்து: 11 பேர் காயம்!!

சுவிட்சர்லாந்தில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் 11 பயணிகள் காயமடைந்துள்ளனர்.ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் பயணித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் ரெயில் ஒன்று சரக்கு வாகனத்துடன் மோதியதில் ரெயிலில் வந்துகொண்டிருந்த 11 பயணிகள் காயமடைந்தனர். பனிமலைகள் மிகுந்த வலைஸ் நகரத்திலிருந்து இந்த ரெயில் திரும்பிவந்துகொண்டிருந்தபோது மொரேல் என்ற கிராமத்தின் அருகே...

செவ்வாய், 26 நவம்பர், 2013

பெருமளவில் ஊதியக்குறைப்பு: சுவிஸ் அரசு தடாலடி

சுவிஸ் நாட்டில் ஊதியக்குறைப்பு செய்ய அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.மூன்றில் இரண்டு பங்கு உயர்மட்ட முதலாளிகள் கூடுதல் ஊதியமளிப்பது அதிருப்தி அளிப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் 1:2 என்ற விகிதத்திற்கு ஊதியத்தை கட்டுபடுத்த வேண்டும் என சுவிஸ் வர்த்தகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் தலைவர்(Christoph...

திங்கள், 25 நவம்பர், 2013

கால்களுக்கு வலிமை வேண்டுமா? இதோ சுவிஸ் பந்து பயிற்சி(காணொளி, இணைப்பு)

சுவிஸ் பந்து பயிற்சிகள் விரைவில் நல்ல பலனை தரக்கூடியது. இந்த வகையில் இந்த பயிற்சி கால்களை வலிமையாக்கி, கால்களில் உள்ள அதிகப்படியான சதையை குறைய உதவுகிறது. பயிற்சி செய்முறை முதலில் விரிப்பில் கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். சுவிஸ் பந்தை கால் பாதத்திற்கு இடையே வைத்து கொள்ளவும். பின்னர் கைகளை தரையில் ஊன்றி கால்களை மெதுவாக மேல் நோக்கி...

ஞாயிறு, 24 நவம்பர், 2013

சுவிஸ் மனநல மருத்துவர்களில் உச்சத்தை எட்டியது

                                 சுவிஸ் மக்கள் நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்வினை அடைய மனநல நிபுணர்களை நாடுகின்றனர் என்று ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸில் பொருளாதார கூட்டுரவு சங்கம்...

சனி, 23 நவம்பர், 2013

கொலைக்குற்றத்தை மறைக்கும் ஜெனிவா பேராசிரியை

அமெரிக்காவில் நடந்த கொலை தொடர்பில் தன் மீதான குற்றச்சாட்டை ஜெனிவா பெண் பேராசிரியர் மறுத்துள்ளார். கலிபோர்னியாவில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக சுவிட்சர்லாந்தில் வெஸ்டர் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றும் பெண் ஒருவர் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மனோத்துவ உளவியல் துறை பேராசிரியரான நார்மா...

இராணுவ ஆதிக்கம் இல்லாத சிறந்த நாடு சுவிஸ்: நாளிதழ் புகழாரம்

 சுவிட்சர்லாந்து நாடானது இராணுவ ஆதிக்கம் இல்லாத சிறந்த நாடு என்று பிரிட்டிஷ் நாளிதழான மோனகல் புகழாரம் சூட்டியுள்ளது. இந்த நாளிதழ் நடத்திய கணக்கெடுப்பில் தரவரிசையில் சுவிட்சர்லாந்து 8வது இடத்தைப் பிடித்துள்ளது. முதலாவது இடத்தை ஜேர்மனியும், இரண்டாவது இடத்தை பிரித்தானியாவும், மூன்றாவது இடத்தை அமெரிக்காவும், நான்காவது இடத்தை பிரான்சும், ஐந்தாவது  இடத்தை...

வியாழன், 21 நவம்பர், 2013

மலேரியாவை ஒழிப்போம்: திரைப்பட எழுத்தாளர் ரிச்சர்ட் அறைகூவல்

உலகமக்கள் அனைவரும் மலேரியாவை ஒழிக்க பாடுபட வேண்டும் என திரைப்பட கதாசிரியர் ரிச்சர்ட் காட்டிஸ் ஜெனிவாவில் நேற்று அறைகூவல் விடுத்துள்ளார். ரிச்சர்ட் கடந்த 10 ஆண்டுகளாக மலேரிய ஒழிப்பு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரிச்சர்ட் இதுகுறித்து கூறுகையில், இதற்கான எளிய வழிமுறைகள்...

அழைப்பிதழோடு விபச்சாரத்தில் அசத்தும் அதிகாரிகள்

சூரிச் பகுதியில் விபச்சாரத்திற்கு துணை போன 11 பொலிசார்கள் குறித்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பகுதியில் இயங்கி வரும் சில்லி இரவு நேர விடுதியில் 11 பொலிசார்கள் அங்கு நடக்கும் விபச்சாரத்திற்கு உதவி செய்துள்ளனர். அதாவது அங்கு நடைபெறும் அக்டோபர்பிஸ்ட் விருந்தில் இவர்களுக்கு வரவேற்பு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளன. இதில்...

திங்கள், 18 நவம்பர், 2013

வறிய நாடுகளுக்கு உதவும் மனப்பான்மையற்ற சுவிஸ்

  உலகில் செல்வந்த நாடுகள் வரிசையில் இருக்கும் சுவிட்சர்லாந்து வறிய நாடுகளுக்கு உதவும் நாடுகள் வரிசையில் மோசமான இடத்தில் இருப்பதாக அமெரிக்காவின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த உலகளாவிய அபிவிருத்தி மையம் Center for Global Development (CGD) வெளியிட்டு அறிக்கையில், சுவிட்சர்லாந்து சர்வதேச அமைதிக் காக்கும் பணிக்காக...

ஞாயிறு, 17 நவம்பர், 2013

சுவிஸில் முதல் “ரயில் காபி ஷாப்” ஆரம்பம்

 சுவிட்சர்லாந்தில் மத்திய ரயில்வே, ஸ்டார்பக்ஜ் காப்பி ஷாப்புடன் இணைந்து ஓடும் ரயில்களில் காப்பி ஷாப் சேவையை ஆரம்பித்துள்ளது. இதுவே உலகில் முதல் ஸ்டார் பக்ஸ் கபேவுடன் கூடிய ரயில். இச்சேவை நவம்பர் 27ம் திகதி முதல் சுவிஸ் நகரங்களுக்குள் ஓடும் ரயில்களில் தொடங்கப்பட உள்ளது. ஸ்டார் பக்ஸ் காப்பி ஷாப் அமெரிக்காவிலுள்ள சியாட்டல் நகரில்மிகப் பெரிய...

ஜப்பானில் களைகட்டும் சுவிஸ் சொக்லேட்

  சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சொக்லேட் தொழிற்சாலை ஜப்பானில் திறக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் சூரிச் பகுதியை சேர்ந்த சொக்லேட் தயாரிப்பாளர் பேர்ரி கேவிபாட் என்பவர் 18.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் செலவு செய்து தொழிற்சாலையை திறந்துள்ளார். இது ஆசியாவின் மிகப்பெரிய சொக்லேட் தொழிற்சாலையாகும். இதுகுறித்து ஜப்பான் பிரதம மந்திரி ஷின்ஷோ ஏபீ...

தேர்வில் சுறுசுறுப்பு வேண்டும்! மாத்திரைகளை பயன்படுத்தும் மாணவர்கள்

 சுவிட்சர்லாந்தில் ஏழு மாணவர்களில் ஒருவர் படிப்பதற்காக சுறுசுப்பை கொடுக்கும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இந்த மாணவர்கள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட கல்வித் திறனை அதிகரிக்க செய்யும் மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். சூரிச், பெசல் மற்றும் ஆஎச் பல்கலைக்கழங்களில் பயிலும் 6 ஆயிரத்து 725 மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட...

அமெரிக்க குடியுரிமையை இழந்த சுவிஸ் பாடகி

சுவிட்சர்லாந்தில் மிக நீண்டகாலமாக வசித்து வரும் பாப் இசைக் கலைஞரான டினா டோனர் தனது அமெரிக்க குடியுரிமையை துறந்தார்.அமெரிக்காவைச் சேர்ந்த 73 வயதான டினா 2009ம் ஆண்டு வரை பாப் இசைப் பாடகியாக இருந்துடன் இசைத்துறையில் இருந்து ஓய்வுபெற்றார். இருபது ஆண்டு காலமாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வந்த இவர் அந்நாட்டு குடியுரிமையை பெற்ற செய்தியான பெரும் பரப்பரப்பை...

உலகின் அரிய மஞ்சள் வைரம் 8.3 கோடி டொலருக்கு ஏலம்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரில் அரிய வகை வைரங்களின் ஏலம் நடைபெற்றது. 59.60 கேரட் எடை கொண்ட மஞ்சள் வைரம் என்றழைக்கப்படும் இந்த அரியவகை வெளிர்சிகப்பு நிற வைரம் சுமார் 6 கோடி அமெரிக்க டொலர்கள் வரை ஏலம் போகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்ப்பார்ப்பை முறியடித்து 8.3 கோடி அமெரிக்க டொலர்களுக்கு  இந்த வைரம் விற்பனையானது....

ஞாயிறு, 10 நவம்பர், 2013

ஆங்கிலத்தில் பின்தங்கும் சுவிஸ்

  சுவிட்சர்லாந்து நாடு ஆங்கிலத் திறமையில் பின்தங்கி காணப்படுகின்றது என்று ஆங்கில திறமை அட்டவணை தெரிவித்துள்ளது(English Profiency Index).உலகளவில் இந்த அட்டவணை மேற்கொள்ளப்பட்டதில் சுவிஸ் நாடு 16 வது இடத்திலேயே ஆங்கில மொழியினை வைத்துள்ளது என்று அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில், சுவிஸில் பன்மொழிகள் பேசப்படுகின்றன...

வேலையில்லாமல்சுவிசில் திண்டாடும் வெளிநாட்டவர்கள்

சுவிசில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வெளிநாட்டவர்களே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சுவிசில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு புள்ளிவிபர தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த மூன்று மாதங்களாக மாறாமல் இருந்த இந்த சதவிகிதம் சற்று மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சுவிசை தாயகமாக கொண்ட இளைஞர்கள் 2.2 சதவிகிதம்...

சனி, 9 நவம்பர், 2013

சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு

பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத், பொலோனியம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத், கடந்த 2004ல் அக்டோபரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார், அதன்பின் நவம்பரில் இறந்தார். இந்நிலையில் மனைவியின் வேண்டுகோளுக்கு ஏற்ப...

செவ்வாய், 5 நவம்பர், 2013

மில்லியன் கணக்கான பரிசினை பெற தாமதன் ஏன்?

சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய லொத்தரி பரிசாக யூரோ மில்லியன் லொத்தரி ஜாக்பாட்(Euro Million Lottery Jackpot) கருதப்படுகிறது.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 114 மில்லியன் பிராங்குகள் அதாவது 125 மில்லியன் டொலர்கள் பரிசாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பரிசினை வென்ற நபர் இதுவரையிலும் பணத்தை பெற்றுக்கொள்ள வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து...

சனி, 2 நவம்பர், 2013

உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியல்:

இந்தாண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலில் பிபா கால்பந்தாட்ட அமைப்பின் அதிபர் பிளாட்டர் இடம்பெற்றுள்ளார்.உலகின் அதிகாரம் மிக்க அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் வெளியிடும். இந்நிலையில் இந்தாண்டுக்கான பத்திரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில்...

புதன், 30 அக்டோபர், 2013

இறப்பை ஏற்படுத்தும் சுவிஸ் நோய்த்தொற்று மருத்துவமனைகள்

  சுவிட்சர்லாந்தில் கிருமிகளால் மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுவிசோநோ மருத்துவகுழு  அமைப்பு தெரிவித்துள்ளது.சுவிஸ்நோ மருத்துவகுழு நடத்திய ஆய்வில் சுவிட்சர்லாந்தில் மருத்துவமனைகள் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 600 மரணங்களையும், 15,000 நோய்த்தொற்றையும் கட்டுப்படுத்தலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்நாடு...

திருடியை வலைவீசி தேடும் சுவிஸ் பெண்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய செல்போனை திருடி சென்ற பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்.சுவிட்சர்லாந்தை சேர்ந்த கல்லூரி மாணவி நில்டாயூஸ் நிஷி(வயது 24). இவர் கடந்த ஏப்ரல் மாதம் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது போது, செல்போன்(ஸ்மார்ட் போன்) தொலைந்து போனது. இந்நிலையில் DropBox-யை அவர் தற்செயலாக சோதித்தபோது திருட்டுப்போன செல்போனை மொராக்கோவில்...

செவ்வாய், 22 அக்டோபர், 2013

இடைத்தரகர் கைது ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ,..

விவிஐபிகளுக்கான ஹெலிகொப்டர்களை வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் இடைத்தரகர் கய்டோ ரால்ப் ஹாஸ்செக், சுவிட்சர்லாந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மிக முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்துவதற்காக 12 ஹெலிகொப்டர்களை வாங்க இந்திய இராணுவ அமைச்சகம் டெண்டர் விட்டது. இதில், இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டாவெஸ்ட்லேண்ட்(AgustaWestland) நிறுவனம் தெரிவு...

புதன், 16 அக்டோபர், 2013

உயிருக்காக போராடும் 79 வயது முதியவர்

 சுவிட்சர்லாந்தில் 79 வயது முதியவர் ஒருவர் விபத்துக்குள்ளானதில் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சுவிஸின் சூரிச் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் அமர்ந்திருக்கையில் 60 வயது பெண்ணொருவர் ஒட்டிய கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு...

செவ்வாய், 15 அக்டோபர், 2013

ஏலத்திற்கு வருகிறது உலகின் பெரிய Orange Diamond

உலகில் காணப்படும் ஆரேஞ்ச் நிற டயமண்ட்களிலே பெரிது எனக் கருதப்படும் பேரிக்காய் வடிவம் கொண்ட வைரம் ஒன்று ஏலத்திற்கு விடப்படவிருக்கின்றது. சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா பகுதியில் வசிக்கும் கிறிஸ்ரே என்பவரால் இது ஏலத்திற்கு விடப்படவுள்ளது. இதன் இறுதிப் பெறுமதியானது 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என எதிர்பார்ப்பதாக கிறிஸ்ரே குறிப்பிட்டுள்ளார். (வீடியோ...

மலைகளை மூடும் பனி சுவிஸில்

  சுவிட்சர்லாந்தில் ஏற்பட்டுள்ள பனிவீழ்ச்சியால் மலைகள் மூடப்படும் நிலைமைக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. சுவிஸில் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டதால் பனிவீழ்ச்சிகளும் ஆரம்பித்துவிட்டன. மேலும் இந்த பனிவீழ்ச்சிகள் மலைகளை மூடும் அளவுக்கு அதிகமாகியுள்ளன. புலிலா, சான் பெர்னரிடோ, ஸ்பிலகின் மற்றும் கிரவ்பெடன் போன்ற மலைகளை சுமார் 2,000 மீற்றர் அளவுக்கு பனிவீழ்ச்சி...

புதன், 9 அக்டோபர், 2013

இத்தாலியில் சடலமாக மீட்பு சுவிஸைச் சேர்ந்த 6 வயது சிறுவன்

  வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன சுவிஸ் சிறுவன் இரண்டு நாட்களுக்குப் பின்னர் இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.இத்தாலியின் தெற்குப் பகுதியான டஸ்கனி பிரதேசம் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கு விடுமுறையைக் கழித்துவிட்டு வீடு திரும்பிய குடும்பத்தினரின் கார் விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில்...

திங்கள், 7 அக்டோபர், 2013

நெடுஞ்சாலையில்தீப்பற்றி எரிந்தது. சுவிஸில் கோர விபத்து

சுவிட்சர்லாந்து நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வான் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸ் நாட்டில் உள்ள A1 நெடுஞ்சாலையில் வான் ஒன்று படுவிபத்துக்குள்ளானதில் தீப்பற்றி எரிந்தது. இந்த தீப்பொறியானது 100 மீற்றர் தொலைவிற்கு பரவியதால் இதனை அணைப்பதற்காக 70 அவசரப்படையினர், 50 தீயணைப்பு படையினர், 3 அவசர ஊர்தி, இரண்டு ஹெலிகொப்டர்...

ஓடும் ரயிலிலிருந்து ஜன்னல் வழியாக குதித்த வாலிபர்

சுவிஸில் ஓடும் ரயிலிலிருந்து குதித்த வாலிபருக்கு பலமான காயம் ஏற்பட்டுள்ளது.19 வயதே ஆன இவருக்கு, தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை சர் ரயில் நிலையத்தில் நடந்தது. இது குறித்து விசாரித்த பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில், அந்த வாலிபர் உண்டேர்வாஷ் நகரில் இருந்து தனது பயணத்தை தொடங்கியுள்ளார். ரயில் சரியாக 6:01க்கு...

சனி, 5 அக்டோபர், 2013

சுவிஸில் இருந்து திருப்பி அனுப்பப்படும் இலங்கை தமிழர்கள்

சுவிஸில் இருந்து திருப்பி அனுப்பப்படும் இலங்கை தமிழர்கள் [ வெள்ளிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2013, 03:34.58 பி.ப GMT ] சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட இரண்டு இலங்கை தமிழர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்தி இவர்களின் புகலிடக் கோரிக்கையானது 2011ம் ஆண்டு ரத்துசெய்யப்பட்டது. மேலும் இவர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு செல்லுமாறு சுவிஸ் அரசாங்கம் உத்தரவிட்டது. இந்நிலையில் இவர்களில்...

வியாழன், 26 செப்டம்பர், 2013

தவளை கடத்திய மனிதருக்கு அபராதம்

அரிய வகை தவளைகளை கடத்திய பிரான்ஸ் நபர் ஒருவர் சுவிஸ் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டாக்சி ஒட்டுனர் ஒருவர் தன்னுடைய வாகனத்தில் 35 வகையான தவளைகளை ஏற்றிக்கொண்டு செப்டம்பர் 14ம் திகதி ஜேர்மன் நாட்டை கடந்து சுவிஸ் நாட்டினை கடக்க முயலும் போது சுங்க அதிகாரிகள் வசம் சிக்கியுள்ளார். சுங்க அதிகாரிகள் இவரிடம் சோதனை நடத்தியதில்,...

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

ஆல்ப்ஸ் மலையில் இறந்த மாணவியின் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

சுவிட்சர்லாந்தில் ஆல்ஃபைன் மலையில் இறந்துபோன மாணவி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 வயது பள்ளி மாணவி ஒருவர் ஆல்ஃபைன் மலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்தார். மாணவியின் மரணத்துக்கு அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் என்று ஈவோலின் ரிசாரட் மேலாளர் மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரி மீது வழக்கு...

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

சுவிஸில் சுருங்கிய பனிக்கட்டி மலை

சுவிஸ் நாட்டின் மார்ட்டரேட் பனிக்கட்டி (Morteratsch glacier) மலையானது சுருங்கியதால் அந்நாட்டின் வெப்பநிலை போக்கு உயர்த்திக்காட்டப்படுகிறது.சுவிட்சர்லாந்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது மார்ட்டரேட் பனிக்கட்டி மலை. அழகான அமைப்புடன் கூடிய இப்பனிக்கட்டி மலையானது வெகுவாக சுற்றுலாப்பயணிகளை கவர்ந்துள்ளது. தற்போது இந்த பனிக்கட்டி மலையானது சுருங்கியதால்...

சனி, 21 செப்டம்பர், 2013

அதிபரின் சொத்து விபரத்தை அம்பலப்படுத்திய சுவிஸ் வங்கி

பீனி பேபி நிறுவனத்தின் அதிபரான டை வார்னர் சுவிஸ் வங்கியில் உள்ள தன்னுடைய சொத்துக்களுக்கு வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் டை வார்னர். 69 வயதான இவர் பிரபலமான பீனி பேபி பொம்மை தயாரிப்பு நிறுவனமான TYயின் அதிபர் ஆவார். இவர் 3 மில்லியன் சொத்துக்களை சுவிஸ் வங்கியில் மறைத்து வைத்து அதற்கு வரி செலுத்தவில்லை...

மீண்டும் சுவிஸ் பொருளாதாரம் உயர்வு!

சுவிட்சர்லாந்தில் பொருளாதாரமானது மீண்டும் உயர்ந்து சாதனை படைத்துள்ளது. 2013ம் ஆண்டில் யூன் மாதம் 1.4 சதவிகிதமாக இருந்த பொருளாதாரம் மூன்றே மாதத்தில் 1.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று பொருளாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் 2014ம் ஆண்டில் இந்த பொருளாதார உயர்வானது 2.3 சதவிகிதத்தை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என செகோ (State Secretariat...

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

விடுதலையான சிறைக்கைதி மர்மமான முறையில்!

சுவிட்சர்லாந்தில் சிறையில் இருந்து தப்பிச் சென்று உயிரிழந்த கைதியின் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.சுவிஸில் அந்தமாட்டன் (39) என்பவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு 2011ம் ஆண்டு ஜெனிவா சிறையில் அடைக்கப்பட்டார். பிரான்சை பிறப்பிடமாக கொண்ட இவர் 2001ம் ஆண்டு ஜெனிவாவிற்கு குடிபெயர்ந்து வந்துள்ளார். பின்பு பாலியல்...
Blogger இயக்குவது.